வியாபாரிகள் ஆர்பாட்டம்... வேலூர் திருப்பத்தூரில் பரபரப்பு!

ஜி.கே.சேகரன்,
வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் வேலூர் நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது
வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத்தலைவர் சுபாஷ் சந்திரன் தலைமையில் நடந்த இதில் செயலாளர் பஷீர் அகமது பொருளாளர் அரவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சிறு மற்றும் குறு வணிகர்களை அழிக்கும் வணிக கொள்கையை கையாலும் பன்னாட்டு நிறுவனங்களான அமேசான் டிமார்ட்,ஃயூகார்ன்,ஈகாம்,பிலிப்கார்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் ஆன் லைன் மூலம் தள்ளுபடி விலையில் பொருட்களை வழங்கி பாரம்பரியமாக வணிகம் செய்து வரும் நுகர் பொருள் நிறுவனங்கள் வியாபாரிகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்.
பன்னாட்டு நிறுவனங்கள் தள்ளுபடி விற்பனையாக விற்பதை தடை செய்து வியாபாரிகளை காக்கவும் வணிகர்களின் நலன் காக்க புதிய வணிக சட்டத்தை உருவாக்க கோரியும் இந்த ஆர்பாட்டம் நடந்தது இதில் திரளானோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்
திருப்பத்தூர்,
அமேசான், டி மார்ட், பில்லிங் கிட், ஜிப்ரோ, போன்ற நிறுவனங்களுக்கு அதிக தள்ளுபடி விலையில் சப்ளை செய்து பாரம்பரிய மளிகை வணிகர்களை முதுகில் குத்தும் மத்திய அரசை கண்டித்து திருப்பத்தூர் நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது
இதில் தலைவர் ஏ.செந்தில் முருகன் செயலாளர் ஏ ரவிச்சந்திரன் கௌரவ தலைவர் வி தீர்த்தமலை பொருளாளர் எஸ் சூரியகுமார் ராஜா ராணி தாமோதரன்.மற்றும் உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
ஆம்பூர்,
ஆம்பூரில் நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் ஆர்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சார்பதிவாளர் அலுவலகம் எதிரில் ஆம்பூர் நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் தடையில்லா க்யூ காமர்ஸ் அனுமதித்திற்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுபாஷ் வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார் முன்னிலை துளசிராமன் ஆம்பூர் நகர வர்த்தக சங்கத் தலைவர் பங்கேற்றனர்.